நித்யானந்தாவுடன் இருக்கும் இரண்டு பெண்களை ஆஜர் படுத்த உத்தரவு

பெங்களூரூவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன ஷர்மா. இவர் நித்யானந்தாவுடைய செயலாளராக வேலை பார்த்து வந்தவர். இவருக்கு 19 மற்றும் 15 வயதில் இரு மகள்களும்,13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மூன்று பிள்ளைகளையும் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.


சில நாட்களுக்கு முன்பு ஆசிரமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கடும் சித்ரவதை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் தனது பிள்ளைகள் மூவரையும் சந்திப்பதற்காக ஜனார்த்தன ஷர்மா பெங்களூர் ஆசிரமத்திற்கு சென்றார். ஆனால் அவர்கள் அங்கிருந்து அகமதாபாத் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் அங்கு சென்ற ஷர்மாவை ஆசிரம நிர்வாகிகள் அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து ஜனார்த்தன ஷர்மா குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் அளித்தார். அதனால் அவரது 15 வயது மகளும், 13 வயது மகனும் மீட்கப்பட்டனர்.